8:56 PM
0

திட்டமிட்டபடி குரூப் 2 தேர்வு டிசம்பர் 1 ந் தேதி நடத்தப்படும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு planned Group 2 Exam December first will be held tnpsc announced

சென்னை, அக்.31- 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 2 (தொகுதி 2)-ல் உள்ளடங்கிய 1064 பதவிகளுக்கான அறிவிக்கையினை (எண் 14/2013) வெளியிட்டு அதற்கான முதல் நிலை எழுத்து தேர்வினை 1-12-2013 அன்று நடத்த திட்டமிட்டிருக்கிறது.

ஆனால், அதே நாளில் (1-12-2013) வேறு சில தேர்வு வாரியம்/ஆணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளும் நடைபெற இருந்ததை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி (குரூப்)-2 தேர்வினை வேறு ஒரு நாளில் நடத்துமாறு விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மேற்படி, கோரிக்கைகளை பரிசீலித்த தேர்வாணையம், தொகுதி-2 தேர்வுக்கு சுமார் 7 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு மேல் விண்ணப்பித்திருப்பதாலும், இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருவதாலும், அடுத்தடுத்து வரும் வார இறுதி நாட்களில் மற்ற தேர்வு வாரியம்/ஆணையங்களின் போட்டித் தேர்வுகள்,

துறைத் தேர்வுகள் இருப்பதனாலும், மேற்படி தேர்வினை விரைந்து முடித்து தேர்வு முடிவுகளை அறிவிக்கும் பொருட்டு இத்தேர்வினை தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்தபடி 1-12-2013 அன்றே நடத்த முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

...

shared via

0 comments:

Post a Comment

Popular Posts